08,May 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

கள்ளழகர் கோவிலில் உறியடி உற்சவம்

கள்ளழகர் கோவிலில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகளும் உறியடி உற்சவமும் அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் இன்றி நடந்தது.

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று உறியடி உற்சவம் நடந்தது. இதில் மூலவர் சன்னதியில் இருந்து கள்ளழகர் பெருமாள், தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தது.

பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் அருகில் உள்ள உறியடி மண்டபத்தில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அப்போது பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகளும் உறியடி உற்சவமும் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கள்ளழகர் கோவிலில் உறியடி உற்சவம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு