04,May 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியன்று 21 வகை இலை அர்ச்சனை

விநாயகர் சதுர்த்தியன்று கணபதிக்கும் 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறாக அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:-

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-


1. முல்லை இலை: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

7. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.

8. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

9. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

10. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.

11. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்

12. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

12. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

13. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

14. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

15. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

16. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

17. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




விநாயகர் சதுர்த்தியன்று 21 வகை இலை அர்ச்சனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு