சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான குற்றவாளி பல்லகொண்ட ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய தெலுங்கானா அமைச்சர் சாமகுரா மல்லா ரெட்டி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சுட்டுக்கொல்ல வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
‘பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கிறோம். குற்றவாளியை நிச்சயம் பிடித்து என்கவுண்டர் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுடன், தேவையான உதவியை செய்ய உள்ளோம்’ என அமைச்சர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..