24,Apr 2024 (Wed)
  
CH
சினிமா

விவாகரத்துக்கு பின் சின்னத்திரையில் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அண்மையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் சமந்தா.

அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், நடத்தி வரும் ‘உங்களில் யார் கோடீஸ்வரர்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதில் அவர் விவாகரத்து விவகாரம் குறித்து பேசினாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




விவாகரத்துக்கு பின் சின்னத்திரையில் சமந்தா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு