மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விடுவதாக நிதி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி, நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி ஆழ்வார் பேட்டையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன்பிறகு சில தவணைகளை மட்டும் வட்டி கட்டிய இவர் அதன் பிறகு பல மாதங்களாக நிதி நிறுவனம் தவணை பணத்தை கேட்டும் சரியான பதிலும், பணமும் வரவில்லை.
இதனால் வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ.1,21,384 கோடி பணம் கட்ட வேண்டும் என்று நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை தொடர்ந்து கடந்த 16ம் தேதி நிலவரப்படி வட்டியுடன் சேர்த்து மதுவந்தியின் கடன் நிலுவைத் தொகை ரூ. 2,02,81,223 கோடியாக இருந்தது. இதற்கு உரிய பதில் இல்லாததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விற்பனைக்கு விடுவதாக நிதி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வைப்பு தொகையாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், ஏலத்துக்கு வரும் சொத்தின் அடிப்படை தொகை ரூ. 1,50,00,000 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..