29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-ந்தேதி தொடங்குகிறது

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

துவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 69-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 4-ந்தேதி மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 10-ந் தேதியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 23-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-ந்தேதி தொடங்குகிறது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு