தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (28-ந்தேதி) தொடங்கியது.
முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாகவும் நடத்தப்படுகிறது.
குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் திரளானோர் மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் மதுரை வந்தார்.
பின்னர் கீழடி தொல்லியல் அகழாய்வு பணிகள், மதுரை நகரில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
இரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.15 மணிக்கு குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.
முதலில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு முதல்- அமைச்சர் அண்ணாநகர் 80 அடி ரோடு வழியாக சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்று கோஷம் எழுப்பினர். இதனை பார்த்த அவர் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..