28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர்

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக, சுருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் சக்தி கொண்ட காயின் சுருதி வசம் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு