25,Dec 2025 (Thu)
  
CH
உலக செய்தி

‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் 10 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பெற்று, தொற்றில் இருந்து மீண்டது நினைவுகூரத்தக்கது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோசை செலுத்தி கொண்டார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளிட்ட பதிவில் “இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர்காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோசை பெறுங்கள். நாம் வைரசுக்கு 2-வது வாய்ப்பு அளித்து விடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் 10 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பெற்று, தொற்றில் இருந்து மீண்டது நினைவுகூரத்தக்கது.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒருநாளில் 53 ஆயிரத்து 945 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 141 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு