27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் சிரியா துறைமுகம் மீது

சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் நடைபெற்று வரும் மிக முக்கிய துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.

சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள துறைமுகம் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி உள்ளன.


துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து நாசமானது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்து இருக்கிறது.


மேலும் துறைமுகத்தில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், கொள்கலன்கள் பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததாகவும், அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றதாகவும், சிரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ தரப்பில் கூறும்போது, ‘லதாகியா துறைமுகத்தில் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அங்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தது.


சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் லதாகியா துறைமுகத்தில் தான் நடந்து வருகிறது. அந்நாட்டின் மிக முக்கிய துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இஸ்ரேல் வான்வழி தாக்குதல் சிரியா துறைமுகம் மீது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு