தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கிறார். அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிப்பிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சக நடிகைகள் மீது அமலா பால் வைத்திருக்கும் இந்த நட்புதான் இந்த சிபாரிசுக்குக் காரணம் என்கிறார்கள்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..