பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது. திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன் கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..