இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும்.
அதன்படி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றுள்ளது. அக்ஷரா மற்றும் வருண் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி போறப்போகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..