20,Apr 2024 (Sat)
  
CH
ஆரோக்கியம்

மனித வரலாற்றில் மிகப்பெரும் பணக்காரர் யார்?

வரலாற்றில் இன்றைய நிலவரப்படி மிகப்பெரிய பணக்காரர் யார்? என்று கூகுள் ஆண்டவர் உதவியுடன் சிலரை இங்கு பட்டியல் இட்டு காட்ட விரும்புகிறேன். அதன்படி..........,

1. எலான் மஸ்க் (Elon Musk)

வரலாற்றில் இன்றைய நிலவரப்படி தென்னாப்பிரிக்காவை சார்ந்த எலான் மஸ்க் அவர்கள்தான் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்கிறார். கிட்டத்தட்ட 336 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் இவரே. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இவர் 167 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளார்.

2. ஜெப் பெசொஸ் (Jeff Bezos)

இரண்டாவதாக அமேசான் வர்த்தக நிறுவனரான அமெரிக்காவின் மெக்சிகோவை சார்ந்த ஜெப் பெசொஸ் அவர்கள் திகழ்கிறார். இவர் தற்போது வரை 196 பில்லியன் டாலருக்கு அதிபதியாக உள்ளார்.

3. பெர்னார்ட் அர்னால்ட்(Bernard Arnault)

ப்ரான்ஸ் நாட்டை சார்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இந்த பணக்கார லிஸ்டில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 168 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இதற்கு அடுத்த படியாக அமெரிக்காவை சார்ந்த பில்கேட்ஸ் 137 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்திலும், லாரி பேஜ் 130 மில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்திலும் உலக அளவில் செல்வந்தர்களாக திகழ்கின்றனர்.

நிகழ்கால வரலாற்றை ஆராய்ந்து பார்த்ததில் மேற்குறிப்பிட்ட ஐந்து பேர்கள் தான் தற்போது பெறும் குபேரர்களாக திகழ்கிறார்கள். யார் பணக்காரர் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது என்ற போட்டியும் இவர்களுக்குள் தான். வரலாற்றில் நமக்கு தெரிந்த பணக்காரர்களும் இவர்கள் தான்.

ஆனால் மனிதனின் எதிர்கால வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த நிகழ்கால பணக்காரர்களுக்கெெல்லாம் ஒரு டான் அதுவும் "டானுக்கெல்லாம் டானாக" கருதப்படும் மனித வரலாற்றிலே மிகப்பெரிய பணக்காரராக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு நபர் இருந்திருக்கிறார்.அந்த வரலாற்று நாயகன் தான் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்கால பணக்காரர்கெல்லாம் பணக்காரராக இன்றளவும் திகழ்கிறார்.

வரலாற்றின் அந்த நம்பர் ஒன்னாக திகழ்ந்த மிகப்பெரிய பணக்காரரின் பெயர் மாலி பேரரசர் மான்சா மூசா(Mansa Musa) அவர்களே ஆவார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி பேரரசை 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்தான் இந்த மான்சா மூசா. இவரது காலம் கி.பி 1280 முதல் கி.பி 1337. இவரது சிறப்பான ஆட்சிமுறையாலும், கொடைத்தன்மையாலும் இஸ்லாம் மார்க்கத்திற்கு பெறும் புகழை தேடித்தந்த குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர். நிறத்தாலும், குணத்தாலும், செல்வத்தாலும் இவரை "கருப்புத் தங்கம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய பேரரசு என்றால் இவர் ஆட்சி புரிந்த மாலி பேரரசு தானாம்.

வரலாற்றில் இதுவரை 300 பில்லியன் டாலரை சம்பாதித்தவர்களில் முதல் மனிதராக எலான் மஸ்க் என்பவர் தற்போதுதான் தடம் பதித்துள்ளதாக அண்மை தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் மாலி பேரரசர் மான்சா மூசாவின் ஆட்சிகாலத்தில் அவரது சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலருக்கு நிகராக இருந்திருக்க கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் 2.5 டிரில்லியன் ரூபாய்க்கு நிகர் என சொல்லலாம்.

மான்சா மூசாவுக்கு முன்னர் மாலியை ஆண்ட மன்னர் தன்னுடைய மிகப்பெரிய ஆசையான "உலகின் கடைசியில் என்ன இருக்கிறது" என்று அறிந்து கொள்ளும் நோக்கில் மிகப்பெரிய ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். அதற்கு முன்பு தனது அரச குடும்பத்தில் பிறந்து யாராலும் கவனிக்கப்படாத மான்சா மூசாவையே தற்காலிக அரசனாக அரியனையில் அமரவைத்து பயணித்த அரசன் மீண்டும் நாடு திரும்பவே இல்லையாம். அந்த அரசரை பற்றிய தகவலும் கிடைக்கவில்லையாம்.

அதன் பிறகு மாலிப் பேரரசை மான்சா மூசா 25 வருடங்களாக சீரும், சிறப்புமாக ஆட்சி செய்தார். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது எந்த ஒரு போரிலும் தோற்றதில்லையாம். போரினால் மட்டும் இல்லாமல் வணிக ரீதியிலும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலி நாடு கடற்கரையை ஒட்டி இருப்பதால் உப்பு உற்பத்தி செய்து உலகெங்கிலும் அவர் ஏற்றுமதி செய்தார். அதுமட்டும் இல்லாமல் மாலி பேரரசு உட்பட்ட பகுதியில் தங்கம் அதிக அளவு கிடைத்ததால் நிறைய தங்கச்சுரங்கங்களை வெட்ட ஆரம்பித்தார். இதன் காரணமாக 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலி மிகப்பெரிய வணிக நாடாக உருவெடுத்தது.

மாலி பேரரசர் மான்சா மூசாவின் ஆட்சியின் கீழ் தற்போதைய செனகல், காம்பியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர்,நைஜிரியா போன்ற நாடுகள் இருந்தன. இவர் கட்டிய பல மசூதிகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இன்றளவும் உள்ளது.

இவ்வாறு 25 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்த மூசாவிற்கு வயதாகிக் கொண்டே சென்றதால் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். கி.பி.1324 இல் அதற்கான ஆயத்தப்பணியை மிகப்பெரிய திருவிழாவைப் போல் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்தார். மூசாவின் "ஹச்" புனித யாத்திரை சென்று திரும்ப ஒருவருடம் கூட ஆகலாம் என்பதால் வழி நெடுகிலும் கலைப்பாற கலைஞர்கள், சமையள் காரர்கள், மருத்துவர்கள் , 80 ஒட்டகங்கள் மற்றும் குதிரையுடன் கூடிய படைவீரர்கள் என மூசாவுடன் 60 ஆயிரம் பேர் மெக்காவிற்கு பயணம் செய்தனர்.

அந்த பயணத்தின் போது ஒட்டகத்தில் 2000 கிலோ தங்கம் மற்றும் 300 பவுண்ட் சுத்திகரிக்கப்படாத தங்கத்துகள்கள் என மூசாவின் படைவீரர்கள் கிலோ கணக்கில் தங்கத்தையும் சுமந்து சென்றனர். அவரது புனித பயணத்தில் இடம்பெற்ற முதல் ஒட்டகம் ஒரு இடத்தில் கால்வைத்தால் அந்த படையின் கடைசி ஒட்டகம் அதே இடத்தில் கால்வைக்க கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆனதாம். அவ்வளவு பெரிய ஊர்வலமாக அது இருந்திருக்கிறது.

மூசா மிகவும் தாராள மனமுடையவர் என்பதால் எகிப்து தலைநகர் கொய்ரோ மட்டும் இல்லாது தான் புனித பயணம் செய்யும் வழிநெடுகிலும் அங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு தான் கொண்டு வந்த தங்கத்தை தானமாக வழங்கிச் சென்றாராம்.மேலும் இந்த பயணத்தின் போது சில பள்ளிவாசல்களையும் இவர் கட்டி இருக்கிறார். இவ்வாறு அவரது "ஹச்" பயண புனித யாத்திரை வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாலியிலும், ஆப்பிரிக்காவிலும் பல பள்ளிகளையும், பல்லாயிரக்கணக்கானோர் படிக்கும் வகையில் பிரம்மாண்டமான நூலகங்களையும் மான்சா மூசா கட்டியுள்ளாராம். இன்றளவும் அந்த பிரமாண்ட நூலகங்கள் வரலாற்று சின்னமாக ஆப்பிரிக்காவில் திகழ்கிறது.

இவ்வாறாக 25 ஆண்டு காலம் எந்த வித போரிலும் தோற்காமல், சிறப்பான ஆட்சி செய்த மாலி பேரரசர் மான்சா மூசா 1337 ஆம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்தார்.

மான்சா மூசா இறந்த பிறகு அவரது மகன் அரியனையில் ஏறியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு போர்சுக்கிசியர்கள், ஸ்பேனியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் அந்நாட்டை சூழ்ச்சியால் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மாலியின் ஆட்சி மொழியே பிரஞ்சு மொழியாக உள்ளதாம்.

இவ்வாறாக இன்றளவும் வரலாற்றில் மிகப்பெரிய பணக்காரராக மாலி பேரரசர் மான்சா மூசா திகழ்கிறார்.

மேற்குறிப்பிட்ட தகவலின் படி கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

கடைசியாக......பணக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்துடன் விடை பெறுகிறேன்.

வீடு, வாசல், சொத்து, சுகம் இருக்கிறவன் மட்டும் பணக்காரன் இல்லை; யாருக்கு நல்ல தகப்பன்,தாய், நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல நண்பர்கள் இருக்கிறார்களோ அவன்தான் உண்மையான பணக்காரன்.

நன்றி!

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





மனித வரலாற்றில் மிகப்பெரும் பணக்காரர் யார்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு