அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய போர் விமானி (102 வயது )சார்லஸ் மெக்கீ மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.
அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடியவர், போர் விமானி சார்லஸ் மெக்கீ. 102 வயதான இவர் நேற்று முன்தினம் மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “போர் விமானி சார்லஸ் மெக்கீ ஞாயிற்றுக்கிழமையன்று தூக்கத்திலேயே இறந்தார், அவர் தனது வலது கையை இதயத்தின் மீது வைத்திருந்தார், அமைதியாக சிரித்தவாறு உயிர் பிரிந்திருந்தது” என கூறப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில், “இன்று ஒரு அமெரிக்க வீரரை இழந்துள்ளோம். அவரது இறப்பால் நான் வருந்துகிறேன். அவரது தியாகம், குணாதிசயங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என கூறி உள்ளார்.
இவர் தனது 23 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..