29,Mar 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

வில்-அம்பு வடிவில் ராமர் கோவில்

வில்லின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் விசயநகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமநாராயணம் திருக்கோவில். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், ‘வில்-அம்பு’ வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லில் பொருத்தப்பட்ட அம்பு, விடுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது எப்படி இருக்குமோ, அந்த அமைப்பில் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அம்பின் அடிப்பகுதி இருக்கும் பகுதியில் கோவில் நுழைவு வாசல் இருக்கிறது. அம்பு மற்றும் இரு பக்க நாண் போன்றவை அடியில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போல் அமைந்துள்ளது. வில்லில் நாண் பூட்டப்படும் இரண்டு பக்கத்திலும் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதே போல் அம்பின் நுனிப் பகுதியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

வில்லில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு நாணின் வழியாகச் சென்று, வில்லின் ஒரு முணையில் உள்ள அமர்ந்த கோல திருமால், மற்றும் சயனக் கோல திருமாலை தரிசிக்கலாம். அங்கிருந்து வில்லின் மறு முனைக்குச் சென்று அங்குள்ள சீதா, லட்சுமணர் சமேத ராமபிரானை வழிபாடு செய்யலாம். வில்லின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் விசயநகரம் இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வில்-அம்பு வடிவில் ராமர் கோவில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு