28,Apr 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல களமிறக்கப்பட்ட செச்சென் சிறப்புப் படை!

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியை படுகொலை செய்யும் நோக்கில் வந்த செச்சென் சிறப்புப் படை வீரர்களைக் கொன்றதன் மூலம் ரஷ்யப் படைகளுக்கு உக்ரேனியப் படைகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசுத் தலைவர் ரம்ஜான் கதிரோவ் சமீபத்தில் 12,000 செச்சென் போராளிகள் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான போரில் ரஷ்யப் படைகளுடன் சேர தயாராகி வருவதாகக் கூறியிருந்தார்.

செச்சென் சிறப்புப் படைகள் மனித உரிமை மீறல்களுக்காகவும், கொடூரமான முறையில் நடத்தப்பட்டதற்காகவும் உலகப் புகழ்பெற்றவை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 56 டாங்கிகளுடன் உக்ரைனுக்கு வந்த செச்சென் சிறப்புப் படைக் குழு உக்ரைனின் ஹோஸ்டோமால் நகருக்கு அருகே உக்ரைன் இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணையால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கியை கொலை செய்ய இந்த குழு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல களமிறக்கப்பட்ட செச்சென் சிறப்புப் படை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு