20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சீனப் பிரஜைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சீனப் பிரஜைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இதன்போது அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பபா பலிகவடன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வைத்தியர்கள், சுகாதார பரிசோதனையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகள் இதன்போது வழங்கப்படுவதுடன், நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளையும் குறித்த குழுவினர் முன்னெடுத்துள்ளனர்

அத்துடன், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் பெருமளவான சீனர்கள் பணி புரிகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பபா பலிகவடன மேலும் கூறியுள்ளார்.




சீனப் பிரஜைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு