முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று (30 ) காலை முதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..