19,Jun 2025 (Thu)
  
CH

மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை ; செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்

கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி - சித்துபாத்தி மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்ட போது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.


அதனை தொடர்ந்து இதுதொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டதோடு சம்பவ இடத்தில் நீதவானினால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.


இந்தநிலையில் நேற்றைய தினம் (02) மீண்டும் அகழ்வுப்பணி ஆரம்பமான நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஐந்து மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களுடன் இதுவரை ஏழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் மனிதப் புதைகுழி என அதனை பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன் வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை ; செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு