பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி அவரை ஜூன் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கடந்த 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதன்போது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..