18,Jun 2025 (Wed)
  
CH

கொத்மலை பேருந்து விபத்து: சாரதியின் சோர்வே காரணம் என விசாரணை அறிக்கை

கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம் மற்றும் ஓய்வின்மை ஆகிய காரணங்களினாலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த விசாரணைக்குழுவின் பிரதானி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, குறித்த பேருந்தில் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட, 84 பேர் பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதனை அடுத்து அருகிலுள்ள குழியொன்றில் விழுந்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்தே விபத்து நேர்ந்துள்ளது.


எவ்வாறாயினும் விபத்தில் மரணித்த குறித்த சாரதியின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.




கொத்மலை பேருந்து விபத்து: சாரதியின் சோர்வே காரணம் என விசாரணை அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு