29,Jun 2025 (Sun)
  
CH

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ; இலங்கையுடன் விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையுடன், ஜெனீவாவில் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.


எனினும், அதன் விடயதானம் மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.


இதேவேளை இந்தக் கூட்டத்தொடருக்கு மத்தியில், எதிர்வரும் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.


அத்துடன், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ; இலங்கையுடன் விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு