பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு பாடசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் குறித்து பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
மரம் முறிந்து விழுந்து சேதமடைந்த பாடசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்து சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் தர்ஷனி இதமல்கொட தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..