இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 ஆக அதிகரித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் தரவுகளில் இருந்து இந்தத் தகவலைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் நிறுவனப் பராமரிப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் தெருவோரக் குழந்தைகளுக்காக 5,000 ரூபா உதவித்தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் நலன்புரியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments
No Comments Here ..