வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஈரானிய ஊடகங்களின்படி, இந்த நிலநடுக்கம் செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும், செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றிய பகுதிகளிலும், சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..