30,Jun 2025 (Mon)
  
CH

புலிகளின் ஆயுதங்கள் தகவல் முட்டாள்தனமானது: சரத் பொன்சேகா மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் அண்மையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முட்டாள்தனமான கருத்துக்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் எந்தப் பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பில், அவற்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்தை சரத் பொன்சேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


அர்ச்சுனாவின் கருத்துக்கு சரத் பொன்சேகா கண்டனம்

அர்ச்சுனாவின் கருத்துக்கள் தவறானவை என்றும், முட்டாள்தனமானவை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:


"பைத்தியக்காரர் ஒருவர் வெளியிட்ட கருத்தாகவே அதனை நான் பார்க்கின்றேன். கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது எமக்குத் தெரியாது. அவை சோதனையின்றி விடுவிக்கப்பட்டதையும் அனுமதிக்க முடியாது. அவற்றில் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன என்று கனவு காணவும் முடியாது."


"எதுவும் அறியாமல் தன்னை வீரனாகக் காண்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது அர்ச்சுனா அறிவிப்புகளை வெளியிடுகின்றார். இப்படியான மனநிலையில் இருக்கும் ஒருவரின் கருத்து தொடர்பில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டியதில்லை" என்றும் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.




புலிகளின் ஆயுதங்கள் தகவல் முட்டாள்தனமானது: சரத் பொன்சேகா மறுப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு