பூஸ்ஸ சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (ஜூன் 26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சிறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதி பிம்சாரா அமல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments
No Comments Here ..