29,Jun 2025 (Sun)
  
CH

செப்டம்பரில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: விவசாய அமைப்புகள் எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒருசில அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். நாட்டில் அரிசி உற்பத்தி மற்றும் குறிப்பாக கீரி சம்பா அரிசியின் இருப்பு குறித்து அரசாங்கத்திடம் சரியான தரவுகள் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 40,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையிலேயே விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கை, நாட்டின் உணவுப் பாதுகாப்பில் சாத்தியமான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.




செப்டம்பரில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: விவசாய அமைப்புகள் எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு