29,Jun 2025 (Sun)
  
CH

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரண விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பான ஐவர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்த அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர், இன்னும் சில மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாக விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அது பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்படும்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் பிறரிடமிருந்து மொத்தம் 110 மணி நேரத்துக்கும் அதிகமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி, பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரண விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு