09,Jul 2025 (Wed)
  
CH

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு: மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்வு

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 13 ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


 வளாகத்தில் மனித எச்சங்கள் காணப்படலாம் என்று சந்தேகத்துக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதி, அகழ்வுக்குரிய இரண்டாவது இடமாக நேற்றைய தினம் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த பகுதியில் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், நேற்றைய தினம் மொத்தமாக 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.


இதுவரையில் மொத்தமாக 56 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணியான ரணிதா ஞானராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


அவற்றில் 50 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 




செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு: மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு