கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவப் பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அருண ராஜபக்ஷ இது குறித்து மேலும் தெரிவிக்கையில், "விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறக்கவிடுவது விமானங்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.













0 Comments
No Comments Here ..