உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இதுவரை வெளியாகாத பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து வினவியபோதே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், "உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
"இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார். விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்" என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த முன்னேற்றங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மைகளையும் வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..