திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (ஜூலை 19) காலை இடம்பெற்ற விபத்தில், வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று கவிழ்ந்ததில், அதில் பயணித்த 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெக்கிராவ பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த இந்த வேன், திறப்பனை பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்தபோது வேனில் சாரதியுடன் 13 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த 10 பேரும் 1990 ஆம்புலன்ஸ் சேவையின் உதவியுடனும், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடனும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..