15,Aug 2025 (Fri)
  
CH

தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை: முஜிபுர் ரஹ்மான் சந்தேகம்


தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு செயல்படுகிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


மேலும் கருத்துத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், "1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு மக்கள் கொடுத்த அதே ஆதரவை, தற்போதைய அரசாங்கத்திற்கும் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றக்கூடிய நிலைமையில் இவர்கள் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. மக்கள் கொடுத்த வாக்குகளுக்கு, இந்த அரசாங்கத்தின் மூலம் நியாயம் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய பார்வையாக இருக்கிறது" என்றார்.


மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்குக் கிடைத்தது என்றும், இன்று அதே சந்தர்ப்பம் அனுரகுமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளது என்றும் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். "ஆனால், அவர்கள் இருவருமே மக்களின் தேவைக்கு அவற்றை (சந்தர்ப்பங்களை) பயன்படுத்தவில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


இந்தக் கருத்துக்கள், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையின் அளவையும், எதிர்காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வுகளையும் குறித்த விவாதங்களை எழுப்புகின்றன.





தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை: முஜிபுர் ரஹ்மான் சந்தேகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு