அருண்விஜய் நடிப்பில் மாஃபியா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் ஓரளவிற்கு ரசிகர்களை திருபதிப்படுத்தியது.
ஆனாலும், துருவங்கள் 16 அளவிற்கு இல்லை என்பதே பலரின் விமர்சனம், அப்படியிருந்தும் மாஃபியா படம் முதல் நாள் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது தமிழகத்தில்.
தற்போது இரண்டாம் நாளும் இப்படம் அதே அளவிற்கு வசூல் செய்ய, தமிழகம் முழுவதும் மாஃபியா ரூ 5 கோடி வரை வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பதாலும், சாட்டிலைட் ரைட்ஸ் நன்றாக சென்றிருக்கும் என்பதாலும், கண்டிப்பாக மாஃபியா வெற்றியடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இன்றும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
0 Comments
No Comments Here ..