20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்- மைத்திரி

தற்காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில தீய செயற்பாடுகளுக்காக தற்போது பிள்ளைகளை பயன்படுத்தவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களை போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருளை விநியோகத்திற்காக பயன்படுத்துவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்- மைத்திரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு