செயற்கையான ஐ லாஷ் வைத்து அடர்த்தியான இமைகளைப் போல் காட்டிக்கொள்வார்கள். அது எல்லா நேரங்களிலும் எடுபடாது
கண் இமைகள் சிலருக்கு அடர்த்தியாக இல்லாமல் மெலிதாக இருக்கும். சிலருக்கு இருப்பதே தெரியாது. அவர்கள் செயற்கையான ஐ லாஷ் வைத்து அடர்த்தியான இமைகளைப் போல் காட்டிக்கொள்வார்கள்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் எடுபடாது. பிசியான நேரத்தில் நம்மையே அறியாமல் வெளியே வந்துவிடும். அது பொதுவெளியில் சங்கடத்தை ஏற்படுத்தலாம். எனவே என்றுமே இயற்கையான முடிதான் பெஸ்ட். அதற்கு என்ன வழி என்று பார்ப்போம்.
எண்ணெய் மசாஜ் : விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை இரவு தூங்கும்முன் கண் இமைகளில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை தோல் : எலுமிச்சை தோலை விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் ஒரு வாரம் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை தடவி வந்தால் முடி வளரும்.
பெட்ரோலியம் ஜெல்லி : இரவு தூக்கும் முன் பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் முடி அடர்த்தியாகும்.
கிரீன் டீ : குளுர்ச்சியாக இருக்கும் கிரீன் டீயில் பஞ்சு தொட்டு கண் இமைகளில் தடவி வர அடர்த்தியாகும்.
உணவு : வைட்டமின், நியூட்ரியன்ஸ் நிறைந்த உணவுப் பழக்கம் இமைகளின் முடி அடர்த்திக்கு உதவும்.
மேலே குறிப்பிட்ட குறிப்புகளை செய்யும்போது பாதுகாப்பாக செய்வது அவசியம். கண்கள் என்பதால் கவனம் அவசியம். முயற்சிக்கும்போது கண் எரிச்சல், அரிப்பு இருப்பின் அவற்றை செய்யாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துங்கள்.
0 Comments
No Comments Here ..