மகேந்திர சிங் தோனி கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியிலில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். தோனி தனது ஓய்வு அறிவிப்பை அறிவிப்பாரா அல்லது தொடர்ந்து விளையாடுவாரா என்கிற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்திருக்கிறது. ஆனால், தோனி இதுவரை தனது ஓய்வு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.
தற்போது 13ஆவது ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக தனது பயிற்சியை வருகிற மார்ச் 2ஆம் தேதி தொடங்க உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.
’சென்னை அணி வீரர்கள், வேறு போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருப்பவர்கள் மார்ச் 19ஆம் தேதிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் பயிற்சிக்குத் திரும்பலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து, தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழச்சியடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் வெளிப்படுத்தும் ஆட்டத்தைப் பொறுத்து அவரது ஓய்வு அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் எதிர்வரும் உலகக் கோப்பை டி20 போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
0 Comments
No Comments Here ..