10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

டெல்லி கலவரம் தொடர்பாக மோடியின் ட்விட்

டெல்லியில் கலவரம் ஏற்பட்டு பல்வேறு இடங்கள் பற்றி எரிகிறது. இந்த கலவரத்தால் இதுவரை 21பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இப்போது ட்வட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் தொடங்கிய போராட்டம் இப்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துவிட்டுச் சென்றார். போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவதற்கு ட்ரம்ப் வந்ததால் கொந்தளித்த மக்கள் “கோ பேக் ட்ரம்ப்” எனப் போராட்டம் நடத்தினர்.

ட்ரம்பிற்கு எதிராக நாடு முழுவதும் 2 நாட்களும் போராட்டம் நடந்தது. இதற்கிடையே, டெல்லி முழு கண்காணிப்பில் இருப்பதாக அரசு தகவல் அளித்தது. ட்ரம்ப் நேற்று முன் தினம் இரவு டெல்லியில் தங்கியிருந்தார். இதனால் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

எனினும் பாதுகாப்பு பணிகள் சரியாக நடப்பதாக அரசு தெரிவித்தது. மேலும் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் உடனுக்குடன் தகவல்கள் சென்றதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் டெல்லி கலவரம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் பெரும்பாலும் குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இஸ்லாமியர்களைத் தாக்குவதும், இஸ்லாமியர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதுமாக இருந்தது.

ட்ரம்ப் நாட்டிலிருக்கும்போது மத்திய அரசை ஆதரித்து ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கிறிஸ்தவ நாட்டின் தலைவர் ஒருவர் இந்தியா வந்திருக்கும்போது உலகத்தின் கவனம் இங்குதான் இருக்கும். அந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் தாக்கபடுவது போல் வீடியோக்கள் வெளியாகியுள்ளது உலக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்காமலிருந்த பிரதமர் மோடி, டெல்லி கலவரம் குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “டெல்லியில் போலீஸாரும், அதிகாரிகளும் நிலைமையைச் சீராக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டேன். அனைவரும் அமைதி திரும்ப பணியாற்ற வேண்டும். அமைதையும், ஒற்றுமையும் நாம் பேண வேண்டும். டெல்லியில் இருக்கும் எனது சகோதர சகோதரிகள், அனைத்து நேரத்திலும் தங்கள் மத்தியில் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்” எனக் கூறியிருக்கிறார்.

மத்திய அரசுக்கு ஆதரவாகக் கலவரக்காரர்கள் சிலர் செயல்பட்ட நிலையில், மோடியிடமிருந்து இந்த கருத்து முன்னரே வந்திருக்க வேண்டும் எனச் சர்ச்சையைக் கிளப்பும் அரசியல் விமர்சகர்கள், இந்த கலவரத்தின் பின்னால் பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது எனக் கூறுகிறார்கள்.




டெல்லி கலவரம் தொடர்பாக மோடியின் ட்விட்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு