இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடர், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது அத்தியாயம் ஜூன் 10ஆம் முதல் ஜூலை 12ஆம் திகதி வரை கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் நடைபெறுவதாக இருந்தது.
அத்துடன், முதலில் லீக் சுற்று, பின்னர் பிளே-ஒஃப், இறுதிப் போட்டி என முழு தொடருக்கான திட்டமும் தயார் செய்யப்பட்டு அதற்கான அட்டவணை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் சுப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வோரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க இருந்தன.
ஆனால், தற்போது கொரோனோ வைரஸ் பரவல், தமிழகத்தில் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் போட்டிகள் அனைத்தும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
போட்டி அட்டவணை மாற்றியமமைக்கப்பட்டு, விரைவில் புதிய போட்டி அட்டவணை வெளியிடப்படுமெனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
0 Comments
No Comments Here ..