10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

காதலியை எழுப்புவதற்காக பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள உள்ள அழகர்பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ராஜாங்கம். கூலித் தொழிலாளியான இருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே, ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

நாகலட்சுமி, தமது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். எனவே, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணில் படாமல் நள்ளிரவு நேரங்களில் மட்டுமே இவர்கள் தனிமையில் சந்தித்து நட்பை வளர்த்து வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில், சந்திக்க வேண்டும் என்பது அவர்கள் இருவரும் எழுதப்படாத ஒப்பந்தமாக பின்பற்றி வந்துள்ளனர். ஆனால், சம்பவ தினத்தன்று, இதனை மறந்துவிட்ட நாகலட்சுமி, வீட்டில் அசந்து தூங்கியுள்ளார். இதனால் கால்கடுக்க நின்று காத்திருந்த ராஜாங்கம் பொறுமை இழந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அருகே நின்று, அவருக்கு தெரிந்த சிக்னல்களையும் கொடுத்துப் பார்த்தும் நாகலட்சுமி, வீட்டிலிருந்து வெளியே வருவதாக இல்லை. 

இதனால் வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற ராஜாங்கம், நாகலட்சுமியை வீட்டிலிருந்து வெளியே வர வைப்பதற்கு, பெட்ரோல் குண்டு திட்டத்தை கையில் எடுத்துள்ளார். பின்னர் விடுவிடுவென அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற ராஜாங்கம், வாட்டர்கேனில் பெட்ரோல் வாங்கி வந்து, பெட்ரோல் குண்டு தயார் செய்துள்ளார். பின்னர் நாகலட்சுமியின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், பெட்ரோல் குண்டை எங்கு எப்படி வீசுவது என யோசித்துள்ளார். தோழியின் வீட்டின் மீது வீசினால், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று கருதினாரோ என்னவோ, மிக எச்சரிக்கையாக, நாகலட்சுமியின் வீட்டிற்கு அருகே உள்ள ரத்தினகுமார் என்பவரின் மாங்காய் கிடங்கு மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார் ராஜாங்கம். இதில், அந்த கிடங்கு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாங்கம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் தூக்கத்தில் இருந்து விழித்து அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தனர். அப்போது மாங்காய் கிடங்கு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தீயை அணைப்பதற்க்காக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் தீயணைப்புப்படை வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. மாங்காய் கிடங்கின் உரிமையாளர் ரத்தினகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராஜாங்கத்தை பிடித்து விசாரணை நடத்தியபோதுதான் இந்த விவாகரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, ராஜாங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




காதலியை எழுப்புவதற்காக பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு