10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

நித்தியானந்தாவால் பொறுமை இழந்த சர்மா மனைவி!!!

குஜராத் ஆசிரமத்தில் இருந்த மகள்களை கடத்தி தங்களுக்கு எதிராக தயார் படுத்தியுள்ளதாக ஜானார்த்தன் மனைவி ஆவேசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய இரு மகள்களான லோபமுத்ரா (21), நித்யநந்திதா (18) ஆகியோர் நாடு கடத்தப்பட்டதாக நித்தியானந்தாவுடைய முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயம் பாலியல் புகாரில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நித்யானந்தாவை போலீசார் வலை வீசி இதுவரை தேடித்தான் வருகின்றனர்.

ஆனாலும் தன் மீதுள்ள வழக்குகளை குறித்து சிறிதுகூட கவலையில்லாமல் ஏதோ ஒரு தீவில் கைலாசாவை கட்டி முடித்துள்ளதாக அவர் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். நிதியானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜானர்த்தன் சர்மாவின் இரு மகள்களும் நித்தியானந்தாவை ஆதரித்தும் தங்களது பெற்றோர்களை குறித்து அவதூறு பரப்பியும் வருகின்றனர். எங்களுக்கு நித்யானந்தாவால் எந்த பாதிப்பும் இல்லை, பெற்றோர் தான் ஆபத்தாக உள்ளனர்.

நாங்கள் எங்களது விருப்பத்தின்படிதான் வெளிநாடுகளுக்கு சுற்றி வருகிறோம் என அவ்வப்போது முகநூலில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தன் சர்மாவின் மனைவி புவனேஸ்வரி சர்மா நித்யானந்தாவை கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், டேய் நித்யானந்தா நீ நிச்சயம் வேரறுக்கப்படுவாய்.

பொய் சந்நியாசியான உங்களது சாபம் பலிக்குமென்றால், என் சாபம் எந்த அளவுக்கு போகப்போகிறது என்பதை இந்த உலகமே பார்க்கத்தான் போகிறது என ஆவேசமாக கூறியுள்ளார். அடுத்ததாக பெற்றோறை பற்றி அவதூறாக பேசி வரும் மகள்களையும் அவர் கண்டித்துள்ளார். அதில், ஏய் லோபமுத்ரா, நந்திதா நீங்கள் என்னுடைய கணவனை குறித்து தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். நீங்கள் திரும்பி வருவீங்களோ, இல்லையோ என் கணவனை குறித்து ஏதாவது பேசினால், உங்கள் மீது அவதூறு வழக்கு போடுவேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார் புவனேஸ்வரி சர்மா.




நித்தியானந்தாவால் பொறுமை இழந்த சர்மா மனைவி!!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு