09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா அச்சத்தால் பிரான்ஸ் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக, ஒருவருடன் ஒருவர் கைகுலுக்குவதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் Oise பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran தெரிவித்தார்.

நம் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் சுற்றுகிறது, ஆகவே மக்களே, இப்போதைக்கு கைகுலுக்கிக்கொள்ளவேண்டாம் என்று கூறினார் அவர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவுவதற்காக அதிகாரிகள் அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் குடிமக்களை கேட்டுக்கொண்டார்.

உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றார் Veran.

இதற்கிடையில், பாதுகாப்புத்துறை அமைச்சரான Florence Parly, பாரீஸுக்கு வடக்கே அமைந்துள்ள Creil இராணுவ தளத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.




கொரோனா அச்சத்தால் பிரான்ஸ் எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு