09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

இத்தாலியில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 21பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 17ஆக இருந்த எண்ணிக்கை, நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் நான்கு பேர் உயிரிழந்ததன் மூலம் 21ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 650ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 888ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்தவர்களில், 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பராமரிக்குமாறு லோம்பார்டி பிராந்தியம், அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.





இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு