சூர்யாவின் அருவா திரைப்படத்தின் தலைப்பு அறிவித்த உடனேயே திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிங்கம், வேல் உள்ளிட்ட சூர்யாவின் வெற்றிப் படங்களை இயக்கிய, இயக்குநர் ஹரி சூர்யாவின் 39 வது படமாக உருவாகவுள்ள அருவா திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அருவா, அருவா சண்டை எனும் பெயருடன் ஏற்கனவே இரு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் சூர்யாவின் அருவா தலைப்பிற்கு எதிராக அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையீடு செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தருண்கோபி தயாரிப்பில் பாடலாசிரியர் ஏகாதசி இயக்கியுள்ள ‘அருவா’ என்று பெயரிடப்பட்ட திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தீபன், அட்சயா எனும் புதுமுகங்களுடன் வேல ராமமூர்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதினை வென்றுள்ளது.
மற்றொரு படமான ‘அருவா சண்டை’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. சிலந்தி பட இயக்குநர் ஆதிராஜன் இயக்கித்தில், சரண்யா பொன்வண்ணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் சூர்யா - ஹரி கூட்டணியின் அருவா திரைப்படத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த இவ்விரு படக்குழுவும் ஓரிரு நாளுக்குள் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி சூர்யா படத்தின் பெயர் குறித்து முறையீடு செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..