கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள வேளையில் கப்பலின் மூலம் நாட்டிற்குள் வரவுள்ள பயணிகளை இடைநிறுத்தம் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு இது போன்ற பல பயணிகள் கப்பல் மூலம் நாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்பொழுது தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதனால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..