12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

ஒரே நாளில் சென்னையில் 103 பேர் கொரோனாவினால் பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2056ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்க்கபடுமா என மக்கள் மத்தியில் நாள்தோறும் கேவிகள் எழும்பி வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயருவதால் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முன்னிலையில் வகித்து வருவதால் வெயிலுக்கு பேர் போன சென்னை தற்போது கொரோனாவால் ஹாட் ஸ்பாட் பகுதியாகவும் மாறியுள்ளது.

தமிழகத்தை கொரோனா தாக்க தொடங்கியதிலேயே முதன்முறையாக 100 பேருக்கு மேல் சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சென்னை வாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றோடு சென்னையில் 673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இன்று 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.





ஒரே நாளில் சென்னையில் 103 பேர் கொரோனாவினால் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு