13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில் நாளைமுதல் திறக்கப்படும் கடைகள்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூடியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும் தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாளை முதல் குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது பணிகளுக்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியானது. அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் புதிதாக 34 வகையான கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை நாளை முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,

1 - டீக்கடைகள்(பார்சல் மட்டும்)

2 - பேக்கரிகள்(பார்சல் மட்டும்)

3 - உணவகங்கள்(பார்சல் மட்டும்)

4 - பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

5 - கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்

6 - சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

7 - மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8 - மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9 - கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10 - வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

கடைகளுக்கு அனுமதி

11 - மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

12 - கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

13 - சிறிய நகைக் கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை)

14 - சிறிய ஜவுளிக் கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும்

15 - மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

16 - டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

17 - பெட்டி கடைகள்

18 - பர்னிச்சர் கடைகள்

19 - சாலையோர தள்ளுவண்டி கடைகள்

20 - உலர் சலவையகங்கள்

21 - கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22 - லாரி புக்கிங் சர்வீஸ்

23 - ஜெராக்ஸ் கடைகள்

24 - இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

25 - இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்

26 - நாட்டு மருந்து விற்பனை கடைகள்

27 - விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

28 - டைல்ஸ் கடைகள்

29 - பெயிண்ட் கடைகள்

30 - எலக்ட்ரிகல் கடைகள்

31 - ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்

32 - நர்சரி கார்டன்கள்

33 - மரக்கடைகள் மற்றும் பிளைவுட்

34 - மரம் அறுக்கும் கடைகள்

ஆகிய கடைகளை திறக்கலாம். ஆனால் முடி திருத்தும் நிலையங்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் அல்லது கடைகள் தொடர்ந்து இயங்கும். அதேசமயம் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு வருங்காலங்கள் பல்வேறு பணிகளுக்கு அல்லது கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேற்கூறிய கடை உரிமையாளர்கள் குளிர்சாதன பெட்டிகளை இயக்காமல் கடை நடத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.




தமிழகத்தில் நாளைமுதல் திறக்கப்படும் கடைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு