13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாட்டிற்கு அழைக்க மத்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 பேர் வருகை தந்ததாகவும் அவர்களில் மூவர் கிளிநொச்சியிலும் ஐவர் முல்லைத்தீவிலும் தங்கியுள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலேயே தங்கியிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாம் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தம்மை தமது குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் மதுரையிலிருந்து இலங்கைக்கு வந்த தாம் மீண்டும் நாடு செல்வதற்கான விருப்பம் இருந்தும் செல்ல முடியாத நிலையில் இங்கு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் தம்மை தாய் நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாட்டிற்கு அழைக்க மத்திய அரசிடம் கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு